Movie: Keladi Kanmani
Singer(s): Uma Ramanan, K.J. Yesudas
Music: Illayaraja
Lyrics: Vaali
ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆ: நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெ: வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
ஆ: கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
பெ: மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும் உன்னாலே
ஆ: மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித் தெளிக்கும் முன்னாலே
பெ: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது
ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணா
நீ பாதி நான் பாதி கண்ணா
ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆ: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும்
கலங்கி விடுமே
பெ: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்
ஆ: சோகம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு
கண்ணே வா
பெ: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும் நந்தவனம் தான்
அன்பே வா
ஆ: சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்.....
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே....